பதிவு செய்த நாள்
18 செப்2019
06:22
புதுடில்லி : வாகன துறையில் மந்த நிலை இல்லை என்று, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ’சி.ஏ.ஐ.டி.,’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, வர்த்தகர்கள் கூட்டமைப்பின், பொதுச் செயலர் பிரவீன் காந்தல்வால் கூறியுள்ளதாவது:இந்திய வாகன துறையில் மந்த நிலை எதுவும் இல்லை. அரசாங்கத்திடமிருந்து நிதி சலுகையை பெறுவதற்காகவே, இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் அழுகின்றன.வாகன நிறுவனங்கள் புதிது, புதிதாக வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. மேலும், அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகளையும் அவை பெற்று வருகின்றன.
இவை எதுவும் இத்துறையில் சொல்லப்படும் மந்தநிலையை பிரதிபலிப்பதாக தெரியவில்லை. இவை ஒருபுறமிருக்க, அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்கள், விழாக்கால விற்பனையை அறிவித்துள்ளன. அரசாங்கம், இதுபோன்ற மெகா விற்பனையை தடுக்க வேண்டும்.மின்னணு வர்த்தக துறையில் உள்ள, அன்னிய நேரடி முதலீடுக்கான விதிமுறைகளை, இது போன்ற நிறுவனங்கள் மீறுகின்றன. அரசாங்கம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|