பதிவு செய்த நாள்
18 செப்2019
10:18
மும்பை : நேற்று (செப்.,17) சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று ( செப்., 18) 200 புள்ளிகள் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதாலும், மின்துறை மற்றும் வங்கித்துறை பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 186.94 புள்ளிகள் உயர்ந்து 36,668.03 புள்ளிகளாகவும், நிப்டி 43.15 புள்ளிகள் உயர்ந்து 10,860.75 புள்ளிகளாகவும் உள்ளன. பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடாக் வங்கி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.10 சதவீதம் அதிகரித்துள்ளன.
அதே சமயம் மாருதி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.50 சதவீதம் சரிவடைந்துள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டுள்ளதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|