பதிவு செய்த நாள்
21 செப்2019
02:42
புதுடில்லி: அண்மையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, நுகர்வோர் துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
‘பெப்சிகோ ஹோல்டிங்ஸ், கோக கோலா இந்தியா, பிஸ்லரி இண்டர்நேஷனல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்லே அக்ரோ, கெவின்கேர்’ உள்ளிட்ட, 32 நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.மேலும், இந்நிறுவனங்கள் இதற்காக, 1,000 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை பொறுத்தவரை, ஆசிய கண்டத்திலேயே இது தான் மிகப் பெரிய திட்டமாகும்.
இது குறித்து, பி.ஏ.சி.இ., எனும், சுத்தமான சூழலுக்கான பேக்கேஜிங் சங்கத்தின் தலைவர், விமல் கெடியா கூறியதாவது:வரும், 2025ம் ஆண்டிற்குள், நாட்டில் இருக்கும் மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக்குகள் அனைத்தையும் மறுசுழற்சிக்குள் கொண்டு வருவது தான், இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு. இதற்காக, 125 அமைப்புகள் மூலம், நாடெங்கிலிருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|