அரசே உச்சபட்சம், ரிசர்வ் வங்கி ஓர் அங்கமே அரசே உச்சபட்சம், ரிசர்வ் வங்கி ஓர் அங்கமே ...  'நிறுவனங்களின் கடன் தேவையில் பெரிய அளவு மாற்றமில்லை' 'நிறுவனங்களின் கடன் தேவையில் பெரிய அளவு மாற்றமில்லை' ...
இனி சொந்த காலில் தான் நிற்கணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
07:02

புதுடில்லி : இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ’சியாம்’ கூறியுள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:வாகன துறையினர், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்படும் என, மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். வாகனங்கள் மீதான, 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்டது.முயற்சிஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைக்காத காரணத்தால், இனி சொந்தக் காலிலேயே நின்று, தேவையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது தான்.

வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கமானது, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க கோரியதோடு மட்டுமின்றி, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட வாகன பிரிவுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரியை நீக்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகன பிரிவுக்கு மட்டும் இழப்பீட்டு கூடுதல் வரியை குறைத்து உள்ளது.எதிர்பார்த்தது போல அறிவிக்காவிடினும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகனப் பிரிவுக்கு மட்டும் வரியை குறைத்துள்ளது, ஒருபகுதி சாதகமான விஷயமே.

நம்பிக்கை நிதியமைச்சரின் சமீபத்திய தொடர்ச்சியான அறிவிப்புகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, சந்தை வலுப்பெற்று, வருவாய் உயரும். இதன் பிறகு, வாகனங்கள் மீதான வரியை, அரசால் குறைக்க முடியும் என, நம்புகிறோம்.இதற்கிடையே வரும் பண்டிகை காலம், நுகர்வோரிடம், வாங்கும் எண்ணத்தை துாண்டுவதாக அமையும் என, நாங்கள் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அண்மைக் காலமாக, வாகன விற்பனை, தொடர்ந்து சரிந்து வந்த காரணத்தினால், வாகன தயாரிப்பாளர்கள், ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி வந்தனர்.வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும், வரி குறைப்பினை கோரி வந்தன.கூடவே, அனைத்து வாகன உதிரிபாகங்களுக்கும், ஒரே சீராக, 18 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரி வந்தனர்.தற்போது, 60 சதவீத வாகன உதிரிபாகங்களுக்கு, 18 சதவீத வரியும், மீதி, 40 சதவீத பாகங்களுக்கு, 28 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட் வரியை, 15 சதவீதமாக குறைத்திருப்பது, வாகன துறையில், அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகளுக்கு துணைபுரியும்.மேலும், வாகன துறையில், ‘மேக் இன் இந்தியா’வுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
ராஜன் வதேரா தலைவர்,வாகன தயாரிப்பாளர்கள் சங்கம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)