பதிவு செய்த நாள்
22 செப்2019
10:04
புதுடில்லி: சந்தை மதிப்பில் முதலிடம் வகித்து வந்த, டி.சி.எஸ்., எனும், 'டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்' நிறுவனத்தை, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு முன்னேறிஉள்ளது.
வெள்ளிக்கிழமையன்று, ரிலையன்ஸ் பங்குகள் விலை அதிகரித்ததையடுத்து, உள்நாட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பில் முதலிடத்தை, ரிலையன்ஸ் பெற்றுள்ளது.வர்த்தக முடிவில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.அதேசமயம், டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7.75 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. இதையடுத்து, முதலிடத்துக்கு ரிலையன்ஸ் வந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை, 6.42 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,254.40 ரூபாயாக அதிகரித்தது.
டி.சி.எஸ்., நிறுவனத்தின் பங்குகள், 1.74 சதவீதம் சரிவைக் கண்டு, ஒரு பங்கின் விலை, 2,065.60 ரூபாயாக குறைந்தது.கடந்த சில காலமாகவே, டி.சி.எஸ்., நிறுவனமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், சந்தை மதிப்பில் மாறி மாறி முதலிடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது, சந்தை மதிப்பில், முதல் ஐந்து இடங்களை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி., பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன.நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, தினசரி பங்குகளின் விலையைப் பொறுத்து அமையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|