பதிவு செய்த நாள்
25 செப்2019
10:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் துவங்கின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் மந்த நிலையாலும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவாலும், வங்கி, ஐடி மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த பங்குகள் சரிவுடன் இருப்பதாலும் இன்றைய வர்த்தகம் சரிவில் உள்ளன.
காலை 10.50 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 349.31 புள்ளிகள் சரிந்து 38,747.83ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 98.05 புள்ளிகள் சரிந்து 11,490.15ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் சரிவு
பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.71.12ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|