பதிவு செய்த நாள்
27 செப்2019
03:43
இந்துார்: வரும் பண்டிகை காலம், வாகனத் துறையின் நிலையை தீர்மானிக்கும் காலமாக இருக்கும் என, பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பவன் கோயங்கா, இது குறித்து மேலும் கூறியதாவது:வாகனத் துறை புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றன. வரும் பண்டிகை காலம் இதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.கடந்த, 12 மாதங்களாக, வாகனத் துறையில் மந்த நிலை இருந்து வந்தது. ஆனால், ஜூலை, 6ம் தேதியிலிருந்து, மத்திய அரசு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், நவராத்திரி, நல்ல மழையுடன் துவங்கி உள்ளது, நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. மேலும், வங்கிகளின் நிதி நிலையும் திருப்தி அளிப்பதாக இருக்கிறது.
நவராத்திரியுடன் துவங்கும், ஆறு வார பண்டிகை காலம், வாகனத் துறையை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் விற்பனையை ஊக்குவிப்பதாக இருந்தால், வாகனத் துறை வலுப்பெற்று விடும்.புதிய கார்களை வாங்குவதற்கான ஆர்வம், மக்களிடம் குறையவில்லை. ஆனால், கனரக வாகனப் பிரிவு கவலை தரத் தக்கதாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|