பதிவு செய்த நாள்
28 செப்2019
06:04
‘புதிய தொழில் திட்டங்களுக்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அனுமதி வழங்க, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., ஒப்புதலை கட்டாயப்படுத்தக் கூடாது’ என, தொழிற்சாலைகள் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தொழிற்சாலைகள் ஆணையர், ராஜேந்திர குமார் தெரிவித்ததாவது: தமிழகத்தில், தொழில் திட்டங்களுக்கு அனைத்து வகையான ஒப்புதல்களும் விரைந்து கிடைக்க, ஒற்றை சாளர முறை துவங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளும் மாதந்தோறும் ஆய்வு செய்கின்றனர்.ஒற்றை சாளர முறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில், நிலுவை கோப்புகள் குறித்தும், நடைமுறை பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது, புதிய தொழில் திட்ட விண்ணப்பதாரர்களிடம், நகர், ஊரமைப்புத் துறை ஒப்புதல் கடிதம் கேட்டு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஒற்றை சாளர முறையில் பல்வேறு துறைகள், ஒரே சமயத்தில் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதால், ஒரு துறை, இன்னொரு துறை ஒப்புதல் குறித்து கேட்பது, நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். எனவே, விண்ணப்பதாரர்களிடம், டி.டி.சி.பி., ஒப்புதல் இருப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு, தொழிற்சாலைகள் ஆணையர், ராஜேந்திர குமார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|