பதிவு செய்த நாள்
28 செப்2019
06:10
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகைகளை, அரசு துறைகள் உடனே வழங்குமாறு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த செயலர்கள், நிதி ஆலோசகர்களை சந்தித்தார்.குறிப்பாக விவசாயம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், திறன் மேம்பாடு, ஜவுளி, நுகர்வோர் விவகாரத் துறை உள்ளிட்ட, 21 முக்கிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை சந்தித்தார்.இந்த சந்திப்புக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பொருட்களை வழங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகைகளை உடனே வழங்குமாறு, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
வழக்குகள் எதுவும் இல்லாத நிலுவைத் தொகை எதையும் நிறுத்தி வைக்காமல், உடனடியாக வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.அரசின் எந்த செலவினங்களும் இதுவரை நிறுத்தப்படவில்லை. தேவையையும், நுகர்வையும் அதிகரிக்கும் வகையிலான நிதிகள் உடனே வழங்கப்படும்.மேலும், அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான மூலதன முதலீடுகள் குறித்த திட்டங்களை, இன்னும் ஒரு வார காலத்துக்குள் தயார் செய்யுமாறும் கூறியுள்ளேன்.
அடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த வெவ்வேறு துறையிலுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் சந்திப்பு நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|