பொதுத் துறை நிறுவன நிலங்கள் விற்பனை பொதுத் துறை நிறுவன நிலங்கள் விற்பனை ...  கன்டெய்னர் மூலமான ஏற்றுமதி வளர்ச்சி சரிவு கன்டெய்னர் மூலமான ஏற்றுமதி வளர்ச்சி சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எந்த பாக்கியும் இருக்கக் கூடாது: நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2019
06:10

புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகைகளை, அரசு துறைகள் உடனே வழங்குமாறு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த செயலர்கள், நிதி ஆலோசகர்களை சந்தித்தார்.குறிப்பாக விவசாயம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், திறன் மேம்பாடு, ஜவுளி, நுகர்வோர் விவகாரத் துறை உள்ளிட்ட, 21 முக்கிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை சந்தித்தார்.இந்த சந்திப்புக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பொருட்களை வழங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகைகளை உடனே வழங்குமாறு, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வழக்குகள் எதுவும் இல்லாத நிலுவைத் தொகை எதையும் நிறுத்தி வைக்காமல், உடனடியாக வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.அரசின் எந்த செலவினங்களும் இதுவரை நிறுத்தப்படவில்லை. தேவையையும், நுகர்வையும் அதிகரிக்கும் வகையிலான நிதிகள் உடனே வழங்கப்படும்.மேலும், அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான மூலதன முதலீடுகள் குறித்த திட்டங்களை, இன்னும் ஒரு வார காலத்துக்குள் தயார் செய்யுமாறும் கூறியுள்ளேன்.

அடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த வெவ்வேறு துறையிலுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் சந்திப்பு நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)