பதிவு செய்த நாள்
29 செப்2019
04:21
புதுடில்லி: கன்டெய்னர்கள் எனும் கொள்கலன்கள் மூலமாக நடைபெறும் ஏற்றுமதியின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என, சரக்கு போக்குவரத்து நிறுவனமான, ‘ஏ.பி.மோலர் மெர்ஸ்க்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:நாட்டில், கன்டெய்னர் மூலமாக நடைபெறும் ஏற்றுமதியின் வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், 1 சதவீதம் குறைந்து உள்ளது.இதற்கு, உலகளவில் வர்த்தக வளர்ச்சி குறைவு, வர்த்தக பதற்றம் அதிகரிப்பு ஆகியவற்றுடன், உள்நாட்டில் கிராமப்புற நுகர்வு குறைவு, முக்கிய உற்பத்தி துறைகளில் மந்தநிலை போன்றவை காரணங்களாகும்.மேற்கு மாநிலங்களில் இறக்குமதி, 4 சதவீதமும், ஏற்றுமதி, 11 சதவீதமும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் இறக்குமதி, 1 சதவீதம் அதிகரித்து, ஏற்றுமதி, 9 சதவீதம் குறைந்துள்ளது.தென் மாநிலங்களில் இறக்குமதி, 1 சதவீதமும், ஏற்றுமதி, 2 சதவீதமும் அதிகரித்துள்ளது. கிழக்கு மாநிலங்களில் இறக்குமதி, 2 சதவீதம் அதிகரித்து, ஏற்றுமதி, 1 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|