பதிவு செய்த நாள்
29 செப்2019
04:31
புதுடில்லி: மத்திய அரசு, பாரத்- – 22 இ.டி.எப்., திட்டத்தின், நான்காம் கட்ட வெளியீட்டை, அக்டோபர் 3ல் மேற்கொள்ள உள்ளது.
இந்த வெளியீட்டின் மூலம், மத்திய அரசு, 8,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுஉள்ளதாக தெரிகிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பாரத் – 22 இ.டி.எப்., திட்டத்தின் வெளியீட்டை, அக்டோபர் 3ல் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இதன் மூலம், 8,000 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளது.இந்த வெளியீட்டில், துணிகர முதலீட்டாளர்கள், 3ம் தேதியிலும், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், அதற்கு அடுத்த நாளிலும் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலையில், 3 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.பாரத் – 22 இ.டி.எப்., மூலம், இதுவரை, 35 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.கடந்த, 2017 நவம்பரில், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாயும்; 2018 ஜூன் மாதத்தில், 8,400 கோடி ரூபாயும்; நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், பங்கு விற்பனை மூலமாக, 1.05 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|