பாரத் – 22 இ.டி.எப்., திட்டத்தின் நான்காம் கட்ட வெளியீடு பாரத் – 22 இ.டி.எப்., திட்டத்தின் நான்காம் கட்ட வெளியீடு ...  லட்சுமி விலாஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை லட்சுமி விலாஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை ...
காலக்கெடு விதித்தார் நிதியமைச்சர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2019
04:33

புதுடில்லி: செலவினங்கள் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், விற்பனையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கான நிலுவைத் தொகைகளை, அக்., 15ம் தேதிக்குள் கொடுத்து முடித்துவிட வேண்டும் என, பொதுத் துறை நிறுவனங்களை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப, பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை அன்று, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த செயலர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களை சந்தித்தார்.முதல் கூட்டம்இந்த கூட்டத்திற்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பொருட்களை வழங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனே வழங்குமாறு, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“வழக்குகள் எதுவும் இல்லாத நிலுவைத் தொகை எதையும் நிறுத்தி வைக்காமல், உடனடியாக வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. அரசின் எந்த செலவினங்களும் இதுவரை நிறுத்தப்படவில்லை. தேவையையும், நுகர்வையும் அதிகரிக்கும் வகையிலான நிதிகள் உடனே வழங்கப்படும். “மேலும், அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான மூலதன முதலீடுகள் குறித்த திட்டங்களை, இன்னும் ஒரு வார காலத்துக்குள் தயார் செய்யுமாறும் கூறியுள்ளேன். அடுத்து, நாளையும், பொதுத் துறையைச் சேர்ந்தவர்களுடன் சந்திப்பு நடைபெறும்,” என, தெரிவித்தார். அதன்படி, நேற்று, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன், மூலதன செலவு திட்டங்கள் குறித்த மறு ஆய்வில் ஈடுபட்டார்.பின், பத்திரிகையாளர்களை சந்தித்த நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், நிலுவைத் தொகைகளை, அக்டோபர் 15ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடன்மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்களும், அதன் ஒப்பந்ததாரர்கள், விற்பனையாளர்கள், சேவைகளை வழங்குபவர்கள் என அனைவருடைய நிலுவைத் தொகைகளையும், 15ம் தேதிக்குள்ளாக வழங்கிவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதனால், பணப்புழக்க நெருக்கடியை குறைக்க முடியும் என, கருதுகிறோம்.மேலும், ஒப்பந்தக்காரர்களுடன் ஏற்படும் பிரச்னைகளை மத்தியஸ்தம் பண்ணுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு என்பதையும், ஒப்பந்தக்காரர்களின் பணம் எவ்வளவு காலம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதையும் விளக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நிலுவைத் தொகை வழங்குவதை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில், அக்டோபர் 15ம் தேதிக்குள், தனி இணையதள வசதியை ஏற்படுத்தும்படி, பெரிய பொதுத் துறை நிறுவனங்களிடம் கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான செலவு திட்டங்களை சமர்ப்பிக்கவும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.ஆகஸ்ட் மாதம் வரை, 34 பொதுத் துறை நிறுவனங்கள் ஏற்கனவே, 48 ஆயிரத்து, 77 கோடி ரூபாயை செலவழித்துள்ளன. மேலும், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 50 ஆயிரத்து, 159 கோடி ரூபாய் செலவுக்கான விரிவான திட்டங்களையும் வைத்துள்ளன.ராஜீவ் குமார், நிதித் துறை செயலர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)