காலக்கெடு விதித்தார் நிதியமைச்சர் காலக்கெடு விதித்தார் நிதியமைச்சர் ...  இன்னொரு வட்டி குறைப்பை அறிவிக்க ஆர்.பி.ஐ., தயார்? இன்னொரு வட்டி குறைப்பை அறிவிக்க ஆர்.பி.ஐ., தயார்? ...
லட்சுமி விலாஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2019
04:35

புதுடில்லி: லட்சுமி விலாஸ் வங்கிக்கு எதிராக, துரித தடுப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளது, ரிசர்வ் வங்கி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதியாதாரம் இல்லாதது ஆகிய காரணங்களால், வங்கி மீது இந்த நடவடிக்கையை, ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக தெரிகிறது.

துரித தடுப்பு நடவடிக்கை என்பது, வங்கி நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில், அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கையாகும். இதனால், வங்கியின் அன்றாட நடவடிக்கைகள் எதுவும் பாதிப்புக்குள்ளாகாது.லட்சுமி விலாஸ் வங்கி, ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தின், 790 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, டில்லி பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.சமீபத்தில், லட்சுமி விலாஸ் வங்கி – இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களின் இணைப்புக்கான அனுமதி கேட்டு, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி, இத்தகைய துரித தடுப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.இதற்கிடையே, இந்தியா புல்ஸ், போலி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வழங்கி இருப்பது பற்றிய ஒரு குற்றச் சாட்டை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, டில்லி உயர் நீதிமன்றம் வெள்ளியன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.விசாரணைகளுக்குப் பிறகே, வங்கியில் என்ன நடந்துள்ளது என்பது தெரிய வரும் என்கின்றனர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)