பதிவு செய்த நாள்
01 அக்2019
04:50

புதுடில்லி: நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 0.5 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 4.7 சதவீதமாக அதிகரித்திருந்தது.நடப்பு ஆண்டின், ஆகஸ்ட் மாதத்தில், முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி சரிவு ஏற்பட்டதால், இந்த வளர்ச்சி குறைவு ஏற்பட்டுள்ளது.கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.
பங்களிப்புஇவை, நாட்டின் தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 38 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.நடப்பு ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 0.5 சதவீதம் சரிவு ஏற்பட்டு உள்ள நிலையில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் வளர்ச்சி, 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 8.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோலவே, இயற்கை எரிவாயு உற்பத்தியும், மைனஸ், 5.4 சதவீதமாகி உள்ளது.கச்சா எண்ணெய், சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் முறையே, மைனஸ், 3.9 சதவீதம், 4.9 சதவீதம், 2.9 சதவீதம் என, குறைந்துவிட்டது.இந்த ஐந்து துறைகளில் ஏற்பட்ட உற்பத்தி வளர்ச்சி பாதிப்பு, மொத்த உள்கட்டமைப்பு துறைகளில் சரிவை கொண்டுவந்து சேர்த்துள்ளது.உருக்கு உற்பத்திஇருப்பினும், உரம் உற்பத்தி, 2.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல், உருக்கு உற்பத்தியும், 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் முதல், ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியானது, 2.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது.இதுவே, கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 5.7 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு கணக்கு பற்றாக்குறைநாட்டின், நடப்பு கணக்கு பற்றாக்குறை, முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதமாக குறைந்துள்ளது. இது பண மதிப்பில், 1.01 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.தங்க இறக்குமதி அதிகரித்த போதிலும், கச்சா எண்ணெய் விலை குறைவால், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், இதே முதல் காலாண்டில், நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.3 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், முதல் காலாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 98 ஆயிரத்து, 287 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடன் வாங்க திட்டம்நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், 2.68 லட்சம் கோடி ரூபாயை, அரசு கடனாக வாங்க இருப்பதாக, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அதானு சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் மொத்தம், 7.10 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில், 62.5 சதவீதம் அளவுக்கு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வாங்கப்பட்டு விட்டது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு, இடைக்கால டிவிடெண்டாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் வாங்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|