பதிவு செய்த நாள்
02 அக்2019
01:19
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று துவங்கியது.மீண்டும் ஒரு வட்டி குறைப்பு இருக்குமா, இருக்காதா என அலசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் தலைமையில், நிதி கொள்கை குழு கூட்டம் நேற்று துவங்கியது. கூட்டத்துக்குப் பின் 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கி அதன் அறிக்கையை வெளியிட உள்ளது.
ஏற்கனவே, சக்திகாந்த தாஸ் தற்போதைய பணவீக்க நிலைமையால், மீண்டும் ஒரு வட்டிக் குறைப்புக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டில் இதுவரை, 1.10 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இதையடுத்து தற்போது, ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|