பதிவு செய்த நாள்
02 அக்2019
01:22
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி.. மூலம், 91 ஆயிரத்து, 916 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இது, ஆகஸ்ட் மாத வசூலை விட குறைவாகும்.
ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 98 ஆயிரத்து, 202 கோடி ரூபாய் ஆகும்.இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வசூல், 94 ஆயிரத்து, 442 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த வசூல், 91 ஆயிரத்து, 916 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், மத்திய ஜி.எஸ்.டி., 16 ஆயிரத்து, 630 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி., 22 ஆயிரத்து, 598 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த ஐ.ஜி.எஸ்.டி., வசூல், 45 ஆயிரத்து, 69 கோடி ரூபாயாகவும் உள்ளது.ஒருங்கிணைந்த, ஐ.ஜி.எஸ்.டி.,யில் இறக்குமதியில் பெறப்பட்ட, 22 ஆயிரத்து, 598 கோடி ரூபாயும் அடக்கம்.
மேலும், கூடுதல் வரியாக, 7 ஆயிரத்து, 619 கோடி ரூபாயும் வசூல் ஆகியுள்ளது. இதில், இறக்குமதியின்போது வசூலிக்கப்பட்ட, 728 கோடி ரூபாயும் அடங்கும்.செப்டம்பர் மாத வசூலை, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.67 சதவீதம் குறைவாகும்.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு வசூல், 7.82 அதிகரித்து உள்ளது. இருப்பினும், இறக்குமதி மூலமான வரி வருவாய் குறைந்துள்ளது. மொத்த வரி வசூல், 4.90 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|