பதிவு செய்த நாள்
02 அக்2019
23:43
புதுடில்லி:போர்டு இந்தியா’ நிறுவனமும், ‘மஹிந்திரா அண்டு மஹிந்திரா’ நிறுவனமும் இணைந்து, புதிய கூட்டு நிறுவனத்தை துவக்க உள்ளன.
இந்த புதிய கூட்டு நிறுவனத்தின், 51 சதவீத பங்குகளை, 657 கோடி ரூபாய் முதலீட்டில் மஹிந்திரா நிறுவனம் வாங்க உள்ளது. மீதி, 49 சதவீத பங்குகள் போர்டு நிறுவனம் வசம் இருக்கும். போர்டு நிறுவனமும், 632 கோடி ரூபாயை, புதிய கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்கிறது.இந்த புதிய நிறுவனம், அடுத்த ஆண்டு மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டின் மூலம், இரு நிறுவனங்களின் தரப்பிலும், எந்த வேலை இழப்பும் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.போர்டு இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தி மற்றும் விற்பனை, புதிய கூட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செல்ல இருக்கிறது.
மேலும், சென்னை மற்றும் குஜராத் மாநிலம், சனந்த் பகுதி யில் அமைந்துள்ள இரண்டு வாகன உற்பத்தி ஆலைகள், கூட்டு நிறுவனத்தின் வசம் மாறுகின்றன. இங்கு, இரு நிறுவன வாகனங்களும் தயாரிக்கப்படும் என்றும், இரு நிறுவனங்களின் முகவர்களும், இரு நிறுவனங்களின் கார்களை விற்பனை செய்வர் எனவும் தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|