பதிவு செய்த நாள்
02 அக்2019
23:48
புதுடில்லி:மூன்று முக்கிய வங்கிகளின் இணைப்பை, சிரமமின்றி எளிதாக மேற்கொள்ள, 34 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய மூன்று வங்கிகளின் இணைப்பு, எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக நடைபெறு வதற்காக, 34 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன.அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதியிலிருந்து, இந்த வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
இது குறித்து, வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த மூன்று வங்கிகளின் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக, 34 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மூன்று வங்கிகளிலிருந்து, தலா, இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த அணிகள், வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பான இடைப்பட்ட காலத்தில், கடன் வழங்கும் நடைமுறை, கடன் விதிமுறைகள் போன்றவற்றில், வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாமல் உதவும். வங்கிக் கணக்குகள் இணைப்பு உள்ளிட்டவை அனைத்தும், ஏப்ரல் 1ம் தேதிக்குள் முடிவடைந்து விட்டாலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க, மேலும், மூன்று முதல், ஆறு மாதம் ஆகும். மூன்று வங்கிகளுக்கும் இடையே முழுமையான இணக்கம் ஏற்பட, இணைப்புக்கு பிறகும், 12 முதல், 14 மாதங்கள் தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|