பதிவு செய்த நாள்
02 அக்2019
23:50
புதுடில்லி:மத்திய அரசு இன்று மேற்கொள்ளும், பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டின் மூலம், 8,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு, பாரத் – 22 இ.டி.எப்., திட்டத்தின், நான்காம் கட்ட வெளியீட்டை, இன்று மேற்கொள்ள உள்ளது. இந்த வெளியீட்டின் மூலமாக, முதலீட்டாளர்களிடமிருந்து, 8,000 கோடி ரூபாய் திரட்ட முடியும் என, அரசு எதிர்பார்க்கிறது.இந்த திட்டத்தில் முதற்கட்டமாக, இன்று, துணிகர முதலீட்டாளர்கள் பங்கேற்க முடியும். நாளை, நிறுவன மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்கலாம்.
இந்த வெளியீட்டு பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கிறது.மத்திய அரசு இதுவரை, பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டின் மூலம், 35 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் திரட்டி உள்ளது.முதல் கட்டமாக, நவம்பர், 2017ல், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாயும்; இரண்டாம் கட்டமாக, ஜூன், 2018ல், 8,400 கோடி ரூபாயும்; மூன்றாம் கட்டமாக, நடப்பாண்டு பிப்ரவரியில், 13 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது.
கடந்த, 2017 நவம்பரில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட, 16 நிறுவனங்கள், மூன்று வங்கிகள் மற்றும் மூன்று தனியார் நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய பாரத்- – 22 இ.டி.எப்., திட்டம் அறிமுகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|