பதிவு செய்த நாள்
04 அக்2019
00:17
புதுடில்லி:ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன பங்கு வெளியீட்டுக்கு, 112 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளன. பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.ஆர்.சி.டி.சி., எனும், ‘இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு, அதன் கடைசி நாளான நேற்றுடன் சேர்த்து, மொத்தம், 111.91 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்திய ரயில்வேயின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி திரட்டுவதற்காக, ஐ.ஆர்.சி. டி.சி., நிறுவனம், 12.6 சதவீத பங்குகளை பொதுப் பங்காக வெளியிட்டுள்ளது.ஒரு பங்கின் விலை, 315 – 320 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, 2.01 கோடி பங்குகள், 10 ரூபாய் முகமதிப்பில் வெளியிடப்பட்டன.
இவை தவிர, 1.6 லட்சம் பங்குகள், அதன் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.இந்த பங்கு விற்பனை மூலம், 645 கோடி ரூபாய் திரட்டப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.பங்குகள் வாங்கும் வாய்ப்பு, நேற்றுடன் முடிவடைந்தது. 9ம் தேதி, பங்குகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.இதைத் தொடர்ந்து, 14ம் தேதி முதல் இந்நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|