பதிவு செய்த நாள்
04 அக்2019
00:20
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை, ஒன்பது நிறுவனங்களை, அதன் பட்டியலிலிருந்து நீக்க உள்ளது.
இந்த மாதம், 17ம் தேதியிலிருந்து, ‘லான்கோ இன்பிராடெக், மோசர் பியர்’ உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட இருப்பதாக தேசிய பங்குச் சந்தை அறிவித்து உள்ளது.‘லான்கோ இன்பிராடெக், மோசர்- பியர், அமர் ரெமிடீஸ், சுப்ரீம் டெக்ஸ் மார்ட், சாம்டெல் கலர், ஹிந்துஸ்தான் டோர் ஓலிவர், சர்வலட்சுமி பேப்பர், எல்.எம்.எல்., ஹனுங் டாய்ஸ் அண்டு டெக்ஸ்டைல்’ ஆகிய ஒன்பது நிறுவனங்களும், பட்டியலிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம், 14 நிறுவனங்களை பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது, தேசிய பங்குச் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொதுமக்களிடமிருந்து உரிய காலக்கெடுவுக்குள் பங்குகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கான பங்கு விலையை நிர்ணயிக்க, தேசிய பங்குச் சந்தை, மதிப்பீட்டாளரை நியமனம் செய்யும். அவர் நிர்ணயிக்கும் மதிப்பின் அடிப்படையில், பங்குகள் வாங்கப்பட வேண்டும். மேலும், இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், குழும நிறுவனங்கள், முழு நேர இயக்குனர்கள் ஆகியோர், 10 ஆண்டுகளுக்கு பத்திரச் சந்தைகளை அணுகவும் தடை விதிக்கப்படும். இவ்வாறு தேசிய பங்குச் சந்தை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|