பதிவு செய்த நாள்
04 அக்2019
00:22
வணிக வரி துறையில், நுண்ணறிவு பிரிவு துவங்கிய மூன்று மாதத்தில், வரி ஏய்ப்பு செய்தோரிடமிருந்து, 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், ஜூன் மாதத்தில், வணிக வரி துறை மறுசீரமைப்பு செய்யப்பட்டது.அப்போது, ஜி.எஸ்.டி., சட்டம் செயலாக்கப் பிரிவுக்கு பதில், நுண்ணறிவு பிரிவு புதிதாக துவங்கப்பட்டது. இந்த பிரிவு, துவங்கிய மூன்று மாதத்தில், பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளது.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:வணிக வரி துறை நுண்ணறிவு பிரிவில், வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்ததும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தரவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
ஆறு மாதங்களுக்கு மேலாக, அவர்கள் தாக்கல் செய்த கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, வரி ஏய்ப்பு உறுதி செய்யப்பட்டால், கமிஷனருக்கு பரிந்துரை செய்து, சோதனை செய்ய அனுமதி பெறப்படும்.அதன் பின், வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களில் சோதனை நடத்தப்படும்.
இது போல, மூன்று மாதங்களில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.இவர்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. அபராதம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|