பதிவு செய்த நாள்
05 அக்2019
23:43
புதுடில்லி:உலகளவில், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான, ’ஷார்ப்’ நிறுவனம், இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அறிமுகங்கள் மூலமாக, இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் பிரிவில் வலுவாக காலுான்ற முயற்சி எடுத்துள்ளது, ’ஷார்ப்’ நிறுவனம். டுவின் குக்கர், சூப்பர்ஹீட்டட் ஸ்ட்ரீம் அவன், சுலோ ஜூஸர், வாக்குவம் பிளென்டர், பிரட் மேக்கர் என, பல பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.
இவை தவிர, காற்றை சுத்திகரிக்கும் ஏர் பியூரிபையர், டிஹியுமிடிபையர்ஸ் மற்றும் வாட்டர் பியூரிபையர்ஸ் ஆகியவற்றையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை
அனைத்தும் மிக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்புகளாகும் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து, ’ஷார்ப் ஜப்பான்’ நிறுவனத்தை சேர்ந்த, யுகி சியோடா கூறியதாவது:புதிய
கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்பதை, எங்கள் இலக்காக கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|