பதிவு செய்த நாள்
08 அக்2019
01:31
புதுடில்லி:அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில், 14ம் தேதி முதல் இறங்குகிறது, மத்திய நிதியமைச்சகம்.நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னைகளான, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை, வரி வசூல் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில், நிதியமைச்சகம் ஈடுபட உள்ளது.
பட்ஜெட் குறித்த ஆரம்பகட்ட வேலைகள், 14ம் தேதி முதல் துவங்கும் என தெரிகிறது.இதுகுறித்து, நிதியமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள், 14ம் தேதி துவங்கும். நாட்டில் தற்போது உள்ள முக்கிய பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை, பணவீக்கம், வரி வசூல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் எடுத்து, அலசி ஆராயப்படும்.
இந்த கூட்டங்களில், தேவையான அனைத்து விபரங்களையும் நிதி ஆலோசகர்கள் வழங்குவர்.நிதி ஆலோசகர்களுடனான கலந்துரையாடல்களை முடித்த பின், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள், தற்காலிகமாக இறுதி செய்யப்படும். பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள், இம்மாதம், 14ம் தேதி முதல், நவம்பர் முதல் வாரம் வரை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|