பதிவு செய்த நாள்
08 அக்2019
01:35
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ அதன் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை துவங்கி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள, பிடாடியில் அமைந்திருக்கும் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, விருப்ப ஓய்வு திட்டத்தை துவங்கி இருக்கிறது, டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம்.ஜப்பானிய கார் நிறுவனமான, டொயோட்டா மற்றும் கிர்லோஸ்கர் குழுமத்தின் கூட்டு நிறுவனமான இந்நிறுவனம், தொழிற்சங்க அமைப்புகளில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. ஆலையில் குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, 23ம் தேதி வரை விண்ணப்பிக்க இந்த வாய்ப்பை வழங்கி உள்ளது, இந்நிறுவனம்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உதவி தலைவர் சேகர் விஸ்வநாதன் கூறியதாவது:இந்த திட்டத்துக்கும், நிறுவனத்தின் வணிக நிலைமைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து விலகி, அவர்களுடைய விருப்ப இலக்குகளை அடைவதற்கு அல்லது விரும்பிய வாழ்க்கையை அடைவதற்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.செப்டம்பர் மாத விற்பனையில், 16.56 சதவீதம் சரிவை, இந்நிறுவனம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|