அடுத்த பட்ஜெட் வேலை 14ம் தேதி துவங்குகிறதுஅடுத்த பட்ஜெட் வேலை 14ம் தேதி துவங்குகிறது ... வர்த்தக மோதலால் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு   கிரெடிட் சுயிஸ் நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல் வர்த்தக மோதலால் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு கிரெடிட் சுயிஸ் நிறுவன ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விருப்ப ஓய்வு திட்டம் ‘டொயோட்டா’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
01:35

புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ அதன் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை துவங்கி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள, பிடாடியில் அமைந்திருக்கும் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, விருப்ப ஓய்வு திட்டத்தை துவங்கி இருக்கிறது, டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம்.ஜப்பானிய கார் நிறுவனமான, டொயோட்டா மற்றும் கிர்லோஸ்கர் குழுமத்தின் கூட்டு நிறுவனமான இந்நிறுவனம், தொழிற்சங்க அமைப்புகளில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. ஆலையில் குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, 23ம் தேதி வரை விண்ணப்பிக்க இந்த வாய்ப்பை வழங்கி உள்ளது, இந்நிறுவனம்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உதவி தலைவர் சேகர் விஸ்வநாதன் கூறியதாவது:இந்த திட்டத்துக்கும், நிறுவனத்தின் வணிக நிலைமைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து விலகி, அவர்களுடைய விருப்ப இலக்குகளை அடைவதற்கு அல்லது விரும்பிய வாழ்க்கையை அடைவதற்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.செப்டம்பர் மாத விற்பனையில், 16.56 சதவீதம் சரிவை, இந்நிறுவனம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)