ஏ,.டி.எம்.,மில் பணம் எடுத்தாலும் சலுகைஏ,.டி.எம்.,மில் பணம் எடுத்தாலும் சலுகை ... சேமிப்பு கணக்குக்கான வட்டி குறைத்து அறிவித்தது எஸ்.பி.ஐ., சேமிப்பு கணக்குக்கான வட்டி குறைத்து அறிவித்தது எஸ்.பி.ஐ., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மீண்டும் வட்டியை குறைக்கும் ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
01:42

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, டிசம்பர் மாதத்தில், மீண்டும் ஒரு முறை வட்டி விகிதத்தை குறைக்கலாம் என, ’கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் தெரிவித்துஉள்ளது.அடுத்து, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், இன்னொரு வட்டி குறைப்பு அறிவிப்பை, ரிசர்வ் வங்கி வெளியிடலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த, 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், 0.25 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்து அறிவித்தது. இதையடுத்து, வட்டி விகிதம், 5.15 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்தும் வரை, பணவீக்க மானது இலக்குக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது எனவும், அதற்கு, ‘இசைந்து செல்லும்’ நிலைப்பாட்டை எடுக்கவிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வாய்ப்புஇதையடுத்து, ரிசர்வ் வங்கியானது, அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை மேலும், 0.25 சதவீதம் குறைத்து, 4.9 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வரும் என கருதுகிறோம்; இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எண்ணுகிறோம்.அமெரிக்க மத்திய வங்கியும், இம்மாதம் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.இந்தியாவை பொறுத்தவரை, சில்லரை விலை பணவீக்கம், 4 சதவீதத்துக்கு அருகில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், டிசம்பர் மாத கூட்டத்துடன், வட்டி விகித குறைப்பு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.அதேசமயம், பணவீக்கம், 4 சதவீதத்தை தாண்டினால், மேற்கொண்டு எந்த வட்டிவிகித குறைப்பும் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை
ரிசர்வ் வங்கி, கடந்த, 4ம் தேதியன்று, ஐந்தாவது முறையாக வட்டி விகித குறைப்பை அறிவித்தது. நடப்பு ஆண்டில் இதுவரை, 1.35 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு செய்துள்ளது, ரிசர்வ் வங்கி.இந்நிலையில், ஐ.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், ‘நடப்பு ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீதமாக நிதிப் பற்றாக்குறை இலக்கு உள்ளது. இதில், 0.4 சதவீதம் அளவுக்கு சரிவு காண வாய்ப்புள்ளது’ என தெரிவித்துஉள்ளது.
இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நிதிச் சந்தை நிலவரங்கள் நிச்சயமற்றதாக உள்ளன. உலகளவிலான மத்திய வங்கிகள், வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இன்னும் சில காலத்துக்கு, 5 சதவீதத்துக்குள்ளாகவே வட்டி விகிதம் தொடரும் நிலையே உள்ளது.இவ்வாறு, ஐ.டி.எப்.சி., நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கியானது, அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை மேலும், 0.25 சதவீதம் குறைத்து, 4.9 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வரும்.கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)