பதிவு செய்த நாள்
08 அக்2019
23:30
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், துவக்க நிலை காரான, ’நானோ’, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஒரே ஒரு காரை கூட தயாரிக்கவில்லை.
பிப்ரவரி மாதத்தில், ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நானோ கார் தயாரிப்பு குறித்து இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.நானோ காரின் எதிர்காலம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே, டாடா மோட்டார்ஸ் கூறி வருகிறது.
கடந்த, 2008ம் ஆண்டு, ’ஆட்டோ எக்ஸ்போ’வில், ’மக்கள் கார்’ என்ற எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார், எதிர்பார்த்த வரவேற்பை ஏனோ பெறவில்லை.கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை ஒரு கார் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மாசு உமிழ்வு விதிமுறையான, ’பாரத் ஸ்டேஜ் 6’ ஐ பூர்த்தி செய்யும் விதத்தில், இந்த காரில் முதலீடு செய்ய எந்த திட்டமும் இல்லாததால், நானோ காரின் தயாரிப்பு மற்றும் விற்பனை, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிடும் என தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|