பதிவு செய்த நாள்
08 அக்2019
23:33
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், அதன் உற்பத்தியை, செப்டம்பர் மாதத்தில், 17.48 சதவீதமாக குறைத்துள்ளது.
நாட்டின்
மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, சமீபகாலமாக
தொடர்ந்து விற்பனை குறைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக,
இந்நிறுவனம் அதன் தயாரிப்பை குறைத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம், 17.48 சதவீதம் அளவுக்கு உற்பத்தியை குறைத்துள்ளது.
தொடர்ந்து எட்டாவது மாதமாக உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது, மாருதி சுசூகி.கடந்த
செப்டம்பர் மாதத்தில், இந்நிறுவனம் மொத்தம், 1.32 லட்சம்
வாகனங்களை
தயாரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.60
லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.கடந்த செப்டம்பரில்,
1.30 லட்சம் பயணியர் வாகனங்கள், தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த
ஆண்டு செப்டம்பரில், 1.58 லட்சம் வாகனங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில், மாருதி சுசூகி
நிறுவனம், அதன் உற்பத்தியை, 33.99 சதவீதம் குறைத்து, மொத்தம்,
1.11லட்சம் வாகனங்களை மட்டுமே தயாரித்துள்ளது.டாடா
மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை, செப்டம்பர் மாதத்தில், அதன்
பயணியர் வாகனங்கள் உற்பத்தி, 63 சதவீதம் சரிந்து, 6,976
வாகனங்களாக குறைந்துவிட்டது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 18 ஆயிரத்து, 855 வாகனங்களாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய்,
மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா
உள்ளிட்ட அனைத்து முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களும், கடந்த
செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் இரட்டை
இலக்க சரிவை கண்டுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|