பதிவு செய்த நாள்
08 அக்2019
23:35
புதுடில்லி:அரசுக்கு
சொந்தமான, ’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’ எனும், இந்திய புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மற்றும் கோல்கட்டாவை சேர்ந்த,
’ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ்’ ஆகிய நிறுவனங்கள், பங்கு
வெளியீட்டுக்கு வருவதற்காக, செபி அனுமதி வழங்கி உள்ளது.
’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’
கடந்த ஜூலை மாதத்தில், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக பங்குச்
சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பம் செய்திருந்தது.ஏற்கனவே,
2017 டிசம்பரில் ஒரு முறை பங்குவெளியீட்டுக்கு இந்நிறுவனம்
விண்ணப்பம் செய்து, செபியின் அனுமதியையும் பெற்றது. ஆனால்,
அப்போதிருந்த சந்தை நிலவரத்தால் பங்கு வெளியீட்டுக்கு
இந்நிறுவனம் வரவில்லை.
ஷியாம் ஸ்டீல், ஜூன் மாதத்தில் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பம் செய்திருந்தது.’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’ நிறுவனம், அதன், 15 சதவீத பங்குகளை அதாவது சுமார், 13.9 கோடி பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.இதில், 6.95 லட்சம் பங்குகள் அதன் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது.
ஷியாம்
ஸ்டீல் நிறுவனம், 66.70 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.
கூடவே, 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிட உள்ளது.இந்த பங்குவெளியீட்டின் மூலமாக, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது, இந்நிறுவனம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|