பதிவு செய்த நாள்
09 அக்2019
23:52
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டி விகிதத்தை, ஆறாவது முறையாக குறைத்து அறிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ., வங்கி அதன், எம்.சி.எல்,ஆர்., அடிப்படையிலான, கடனுக்கான வட்டியில், 0.10 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இது, ஆறாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த, எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான வட்டி குறைப்பு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனையடுத்து, வட்டியானது, 8.15 சதவீதமாக இருந்தது, 8.05 சதவீதமாக குறைகிறது.
கடனுக்கான வட்டியை குறைத்து அறிவித்திருக்கும் அதே நேரத்தில், வங்கி யின் சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளுக்கும் வட்டியையும் குறைத்துள்ளது.ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் சேமிப்புக் கணக்கு டெபாசிட்டுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டியை குறைத்து, 3.25 சதவீதமாக அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஓராண்டுக்கு மேல் ஈராண்டுக்குள் உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கும் வட்டியை, 0.10 சதவீதம் முதல், 0.30 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது. இதுவும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்து அறிவித்ததையடுத்து, எஸ்.பி.ஐ., இந்த வட்டி குறைப்பை அறிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|