பதிவு செய்த நாள்
10 அக்2019
00:06
மும்பை:நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகளான, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவை, தசரா விடுமுறைக்கு பிறகு, நேற்று உயர்வை கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ், 645 புள்ளிகள் அதிகரித்து, 38,177.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வங்கி, நிதி, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, 645.97 புள்ளிகள் அல்லது 1.72 சதவீதம் உயர்வைக் கண்டது, சென்செக்ஸ்.
இதே போல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டி, 186.90 புள்ளிகள் அதிகரித்து, 11,313.30 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.68 சதவீதம் உயர்வாகும்.சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் வங்கி மிக அதிக உயர்வை கண்டது. 5.45 சதவீதம் விலை உயர்வை, இந்த வங்கி பங்குகள் கண்டன.
இதற்கு மாறாக, யெஸ் வங்கி 5.26 சதவீதம் விலை சரிவை சந்தித்தது. இதே போல், ஹீரோ மோட்டோகார்ப், எச்.சி.எல்., டெக், ஐ.டி.சி., டி.சி.எஸ்., இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியநிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|