பதிவு செய்த நாள்
10 அக்2019
00:18
மும்பை :ஜெர்மன் நாட்டை சேர்ந்த, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ், தசரா பண்டிகையை முன்னிட்டு, ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட கார்களை டெலிவரி செய்துள்ளது.
மும்பை, குஜராத் மற்றும் சில நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, மெர்சிடஸ் பென்ஸ் காரின் பல்வேறு மாடல்கள், கடந்த செவ்வாயன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளன. தசரா மற்றும் நவராத்திரியை முன்னிட்டு, கடந்த ஆண்டில் இதே நாளில் விற்பனை ஆனதை விட, இந்த ஆண்டில் அதிகம் விற்பனை ஆகியிருப்பதாக நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில், தசரா நாளன்று, மும்பையில் மட்டும், 125 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. 74 கார்கள் குஜராத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் ஸ்வெங் கூறியதாவது:
பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களின் உற்சாக மனநிலை காரணமாக, மும்பை, குஜராத் மற்றும் இதர நகரங்களில், 200 கார்களுக்கும் மேல் டெலிவரி செய்துள்ளோம்.இதே போன்றதோர் உற்சாகத்தையும் ஆர்வத்தையும், இதற்கு முன்பு கடந்த ஆண்டிலும் நாங்கள் கண்டோம். இது எங்களுக்கு ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|