பதிவு செய்த நாள்
10 அக்2019
23:58
சென்னை:சமூக வலைதளங்களில் பரவும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என, எல்.ஐ.சி., நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, எல்.ஐ.சி., எனும், லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாட்ஸ் அப், முகநுால் போன்ற சமூக வலை தளங்களில், எல்.ஐ.சி., குறித்தும், அதன் நிதி நிலை குறித்தும், தவறான தகவல்கள் சில தினங்களாக, பரப்பப்பட்டு வருகின்றன. எல்.ஐ.சி.,யை தவறாக சித்தரித்து, பாலிசிதாரர்களுக்கு, தவறான தகவல்களை அளிக்கும் நோக்கில், சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த ஆதாரமும் இல்லாமல், வெளியிடப்படும் இது போன்ற தகவல்களை, பொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் நம்ப வேண்டாம். எல்.ஐ.சி., நல்ல பொருளாதார நிலைமையுடன் இருக்கிறது.2018 – 19ம் நிதியாண்டில், எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு அதிகளவு போனஸ் தொகையாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்துள்ளது. மேலும், ஆக., 31ம் தேதி வரை, எல்.ஐ.சி.,யின் சந்தை பங்களிப்பு, பாலிசி எண்ணிக்கையில், 72.84 சதவீதமும், பிரீமியம் அடிப்படையில், 73.06 சதவீதமும் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|