பதிவு செய்த நாள்
11 அக்2019
00:03
புதுடில்லி:ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக, புதிதாக ஒரு குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.அண்மைக்காலமாக, ஜி.எஸ்.டி., வருவாய், வசூல் இலக்கை எட்ட முடியாமல், குறைவாகவே இருந்து வருகிறது.
இதையடுத்து, ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, அதிகாரிகள் மட்டத்தில், ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இது குறித்த அரசின் அறிவிப்பில், இந்த குழுவானது, பரந்த அளவில் சீர்த்திருத்தங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அதன் மூலம், விரிவான பரிந்துரைகளின் பட்டியல் வெளிவரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
முறைகேடுகள், தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், ஜி.எஸ்.டி., குறித்தான முறையான மாற்றங்கள் பற்றிய ஆலோசனைகளை குழு வழங்கும் என தெரிகிறது.மேலும், வரி தளத்தை விரிவாக்குவதற்கான ஆலோசனைகளையும் குழுவிடம் அரசு கோரி உள்ளது.
கொள்கை ரீதியான நடவடிக்கைகள், வரிச்சட்டத்தில் தேவையான மாற்றங்கள், சிறந்த நிர்வாக ஒருங்கிணைப்பு, மேம்பட்ட தரவு பகுப்பாய்வு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவை குறித்த பரிந்துரைகளையும் இந்த குழு வழங்கும்.இந்த குழுவானது, அதன் முதல் அறிக்கையை, 15 நாட்களுக்குள், ஜி.எஸ்.டி., கவுன்சில் செயலகத்தில் சமர்ப்பிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|