பதிவு செய்த நாள்
11 அக்2019
23:25
ஒன்பது பொது துறை வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளன; அவற்றில் கணக்கு வைத்து இருந்தால், அதை திரும்ப பெறுங்கள் என, சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் ஆப், முகநுால், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், வங்கிகள் மூடல் தொடர்பான ஒரு பதிவு வலம் வருகிறது. அதில், ‘யூகோ வங்கி, ஐ.டி.பி.ஐ., மஹாராஷ்டிரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி மற்றும் யுனெடெட் வங்கி ஆகியவை நிரந்தரமாக மூடப்பட உள்ளன’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:இந்த தகவல் முற்றிலும் தவறானது. மூடப் படுவதாக கூறப்படும், யுனெடெட் வங்கி, கார்ப்பரேஷன் மற்றும் ஆந்திரா வங்கிகள், மத்திய நிதி அமைச்சர் அறிவித்த, வங்கிகள் இணைப்பில் இடம்பெற்றுள்ளன.இதர சில வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றை மேம்படுத்தி, லாபகரமாக மாற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, இது போன்று உலா வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|