தவறான தகவல்: பிரமல் நிறுவனம் புகார்தவறான தகவல்: பிரமல் நிறுவனம் புகார் ...  தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஒற்றை இலக்கத்துக்கு வந்த வங்கி கடன் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2019
23:29

மும்பை:நடப்பு நிதியாண்டில், முதன் முறையாக, வங்கி கடன் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பர், 27ம் தேதி வரையிலான, 15 நாட்களில், கடன் வளர்ச்சி, 8.79 சதவீதமாக குறைந்து, 97.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலத்தில், 89.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.இதற்கு முன்,செப்டம்பர், 13ம் தேதியுடன் முடிவடைந்த, 15 நாட்களில், வங்கி கடன் வளர்ச்சி, 10.26 சதவீதமாக அதிகரித்து, 97.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடன் மட்டுமின்றி வைப்புத் தொகை வளர்ச்சியும் மெதுவாக உள்ளது.



வைப்புத் தொகை வளர்ச்சி, 9.38 சதவீதமாகி, 129.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலத்தில், 118 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. டெபாசிட்டை பொறுத்தவரை, செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த, 15 நாட்களில், 10.02 சதவீதம் அதிகரித்துள்ளது.சேவை துறைக்கான கடன் வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 26.7 சதவீதத்திலிருந்து, 13.3 சதவீதமாக குறைந்துவிட்டது.



தனிநபர் கடனை பொறுத்தவரை, மிதமான வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், 18.2 சதவீதமாக இருந்தது, நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 15.6 சதவீதமாகி உள்ளது.இருப்பினும், தொழில் துறையினருக்கான கடன், கடந்த ஆண்டு ஆகஸ்டில், 1.9 சதவீதமாக இருந்தது, நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 3.9 சதவீதமாக, இரட்டிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)