பதிவு செய்த நாள்
11 அக்2019
23:29
மும்பை:நடப்பு நிதியாண்டில், முதன் முறையாக, வங்கி கடன் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பர், 27ம் தேதி வரையிலான, 15 நாட்களில், கடன் வளர்ச்சி, 8.79 சதவீதமாக குறைந்து, 97.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலத்தில், 89.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.இதற்கு முன்,செப்டம்பர், 13ம் தேதியுடன் முடிவடைந்த, 15 நாட்களில், வங்கி கடன் வளர்ச்சி, 10.26 சதவீதமாக அதிகரித்து, 97.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடன் மட்டுமின்றி வைப்புத் தொகை வளர்ச்சியும் மெதுவாக உள்ளது.
வைப்புத் தொகை வளர்ச்சி, 9.38 சதவீதமாகி, 129.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலத்தில், 118 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. டெபாசிட்டை பொறுத்தவரை, செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த, 15 நாட்களில், 10.02 சதவீதம் அதிகரித்துள்ளது.சேவை துறைக்கான கடன் வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 26.7 சதவீதத்திலிருந்து, 13.3 சதவீதமாக குறைந்துவிட்டது.
தனிநபர் கடனை பொறுத்தவரை, மிதமான வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், 18.2 சதவீதமாக இருந்தது, நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 15.6 சதவீதமாகி உள்ளது.இருப்பினும், தொழில் துறையினருக்கான கடன், கடந்த ஆண்டு ஆகஸ்டில், 1.9 சதவீதமாக இருந்தது, நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 3.9 சதவீதமாக, இரட்டிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|