அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு ...  தங்க பத்திரம் தரும்  வரிச்சலுகைகள் தங்க பத்திரம் தரும் வரிச்சலுகைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மூன்று நிறுவன பங்கு விலக்கல் தீவிரம் காட்டும் மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
00:11

புதுடில்லி:மத்திய அரசு, மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில், தற்போது தீவிரம் காட்டி வருகிறது.


'கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன், டி.எச்.டி.சி., இந்தியா' ஆகிய மூன்று நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவில், மத்திய அரசு உள்ளது. இதையடுத்து, இதற்கான ஆலோசகர்களை நியமிக்கும் முயற்சியில் தற்போது இறங்கி உள்ளது.


டி.எச்.டி.சி., இந்தியா நிறுவனம், மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு திட்டத்தில் உருவானதாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசுக்கு, 75 சதவீத பங்குகளும், மாநில அரசுக்கு, 25 சதவீத பங்குகளும் உள்ளன.நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தை பொறுத்தவரை, 100 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன.கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின், 54.80 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன.


இந்த மாத துவக்கத்தில் மத்திய அமைச்சரவை, இந்நிறுவனத்தின், 30 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது.அடுத்த, 4 முதல், 5 மாதங்களுக்குள்ளாக, இந்த பங்கு விற்பனையை முடித்துவிட அரசு திட்டமிட்டுள்ளது.இதுவரை நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் மூலமாக, 12 ஆயிரத்து, 357 கோடி ரூபாயை திரட்டி உள்ளது மத்திய அரசு.



மேலும், மிகப்பெரிய ஐந்து பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டு உள்ளது.பங்கு விலக்கல் மூலமாக மத்திய அரசு, 1.05 லட்சம் கோடி ரூபாய் நிதியை திரட்ட இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)