பதிவு செய்த நாள்
13 அக்2019
00:11
புதுடில்லி:மத்திய அரசு, மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில், தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
'கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன், டி.எச்.டி.சி., இந்தியா' ஆகிய மூன்று நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவில், மத்திய அரசு உள்ளது. இதையடுத்து, இதற்கான ஆலோசகர்களை நியமிக்கும் முயற்சியில் தற்போது இறங்கி உள்ளது.
டி.எச்.டி.சி., இந்தியா நிறுவனம், மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு திட்டத்தில் உருவானதாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசுக்கு, 75 சதவீத பங்குகளும், மாநில அரசுக்கு, 25 சதவீத பங்குகளும் உள்ளன.நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தை பொறுத்தவரை, 100 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன.கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின், 54.80 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன.
இந்த மாத துவக்கத்தில் மத்திய அமைச்சரவை, இந்நிறுவனத்தின், 30 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது.அடுத்த, 4 முதல், 5 மாதங்களுக்குள்ளாக, இந்த பங்கு விற்பனையை முடித்துவிட அரசு திட்டமிட்டுள்ளது.இதுவரை நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் மூலமாக, 12 ஆயிரத்து, 357 கோடி ரூபாயை திரட்டி உள்ளது மத்திய அரசு.
மேலும், மிகப்பெரிய ஐந்து பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டு உள்ளது.பங்கு விலக்கல் மூலமாக மத்திய அரசு, 1.05 லட்சம் கோடி ரூபாய் நிதியை திரட்ட இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|