அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு ...  தங்க பத்திரம் தரும்  வரிச்சலுகைகள் தங்க பத்திரம் தரும் வரிச்சலுகைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மியூச்சுவல் பண்டு துறையில் ரூ.1.5 லட்சம் கோடி வெளியேறியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
00:19

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில், 1.5 லட்சம் கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.


இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ’ஏ.எம்.எப்.ஐ.,’ தெரிவித்து உள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலி ருந்து, முதலீட்டாளர்கள், 1.5 லட்சம் கோடி ரூபாயை திரும்ப பெற்று உள்ளனர்.


கடன் நெருக்கடி


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 1.02 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பரில், ரூ. 1.5 லட்சம் கோடிவெளியில் எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்திய மாதங்களில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் கடன் நெருக்கடிகளை அடுத்து, மியூச்சுவல் பண்டு அதிக அழுத்தத்தை சந்தித்து வருகிறது.


கடந்த மாதத்தில், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, 1.52 லட்சம் கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடன் திட்டங்களிலிருந்து அதிக அளவு பணம் வெளியேறி உள்ளது.மாறாக, பங்கு சார்ந்த திட்டங்களிலும், தங்க, இ.டி.எப்., திட்டங்களிலும், மதிப்பீட்டு காலத்தில் புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த மாதத்தில், பங்கு சார்ந்த திட்டங்களில், 6,489 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு.


சொத்து மதிப்பு


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பங்கு சார்ந்த திட்டங்களில், 9,090 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டு உள்ளது.இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க, இ.டி.எப்., திட்டத்தில், 145 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில், ரூ.44 கோடிமட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.


கடன் சார்ந்த திட்டங்களிலிருந்து முதலீடுகள் வெளியேறியதால், மியூச்சுவல் பண்டு துறையின் சொத்து மதிப்பு, 4 சதவீதம் குறைந்து, 24.51 லட்சம் கோடி ரூபாயாக செப்டம்பர் மாதத்தில் குறைந்துவிட்டது. இதுவே, ஆகஸ்ட் மாதத்தில், 25.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ‘ஏ.எம்.எப்.ஐ.,’ தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)