பதிவு செய்த நாள்
15 அக்2019
00:36
புதுடில்லி:கத்தோலிக் சிரியன் வங்கி, பங்கு வெளியீட்டு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' அனுமதி வழங்கி உள்ளது.கேரளாவைச் சேர்ந்த, தனியார் துறை வங்கியான, கத்தோலிக் சிரியன் வங்கி, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது.
இதையடுத்து, பங்கு வெளியீட்டுக்கு வர, இவ்வங்கிக்கு செபி அனுமதி வழங்கி இருக்கிறது.புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம், 30 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்த வங்கி திட்டமிட்டுள்ளது.மேலும், தற்போதுள்ள பங்குதாரர்களின், 1.98 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
இந்த வங்கி, நாட்டின் மிகவும் பழமையான வங்கிகளில் ஒன்றாகும். கடந்த, 98 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, வங்கியின் மூலதனத்தை பெருக்கிக் கொள்ள பயன்படுத்தப்படும் என தெரிகிறது.இதற்கு முன், இவ்வங்கி, 2015ல், 400 கோடி ரூபாய் திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி பெற்று, பின் அதிலிருந்து பின்வாங்கி விட்டது. இப்போது, மீண்டும் வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|