எஸ்.பி.ஐ., லைப்  நிகர லாபம் சரிவுஎஸ்.பி.ஐ., லைப் நிகர லாபம் சரிவு ...  ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு ...
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
07:21

புதுடில்லி: இன்னும் இரண்டே ஆண்டுகளில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், 14.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, முதல் இந்திய நிறுவனமாக உருவெடுக்கும் என, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 8.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 14.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாற, அதன் புதிய வர்த்தக முயற்சிகள் கைகொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, சிறு கடைகளில், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கான, எம்., – பி.ஓ.எஸ்., சேவையை வழங்குவது அதிகரிக்கும்.

மேலும், ‘மைக்ரோசாப்ட்’ துணையுடன், சிறிய நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் நுழைவது, ‘ஜியோ பைபர் பிராட்பேண்டு’ விளம்பரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் இந்நிலையை எட்டலாம்.நிறுவனம் வளர்ச்சி பெறும் நிலையில், ஜியோ மொபைல் வைத்திருக்கும் ஒரு நபரால் தற்போது கிடைக்கும், 151 ரூபாய், 2021 – 2022ம் நிதியாண்டில், 177 ரூபாயாக அதிகரிக்கும்.

மேலும், 10 லட்சம் சிறிய கடைகள் எம்., – பி.ஓ.எஸ். வகைக்காக ஒவ்வொன்றும் மாதம், 750 ரூபாய் வழங்கும். 1.20 கோடி பேரின் பிராட்பேண்டு இணைப்பு மூலம், ஒரு நபருக்கு மாதம், 840 ரூபாய் கட்டணம் கிடைக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)