‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும் ...  வலுவான நிலையில் பொருளாதாரம்; தலைமை ஆலோசகர் சுப்ரமணியன் அறிவிப்பு வலுவான நிலையில் பொருளாதாரம்; தலைமை ஆலோசகர் சுப்ரமணியன் அறிவிப்பு ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
07:23

மும்பை: டாடா குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவரான ரத்தன் டாடா, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்யும் நபராக தான் மாறியது, ஒரு விபத்து போன்றது தான் என தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா இதுவரை, 12க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நான் டாடா குழுமத்தில் இருந்தபோது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்க்கும்போது ஆச்சரியப்படுவேன். ஆனால், டாடா குழுமத்தின் பார்வை வேறு திசையில் இருந்தது.நான் ஓய்வுபெற்ற பின், என் சொந்த பணத்திலிருந்து சிறிய அளவில் முதலீடு செய்தேன்.இரண்டு, மூன்று ஆண்டுகளில் இத்துறை மிகவும் சிறப்பான சிந்தனைகளையும், துடிப்பாற்றலையும் கொண்டிருந்ததை அறிந்து கொண்டேன்.

பொதுவாக எல்லாரும் கருதும் அளவுக்கு எல்லாம் என்னிடம் பணம் கிடையாது. முதலீடு செய்வதற்கு உரிய ஒரு நிறுவனத்தை, நான் என் உள்ளுணர்வின் மூலமே முடிவு செய்கிறேன். இன்னும் சொல்வதென்றால், மற்ற எல்லாவற்றையும் விட நிறுவனர்களுடன் பேசும் போது, அவர்களது நடத்தை, முதிர்ச்சி, தீவிரம் ஆகியவற்றை வைத்தே முடிவுக்கு வருகிறேன்.

தொழில் நுட்ப துறை, ஆரோக்கிய பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை, ஆன்லைன் மற்றும் தயாரிப்பு ஆகிய துறைகளில், முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன.மனதளவில் இந்தியர்கள் அனைவருமே தொழில்முனைவோர்கள் தான். நமக்கு தேவைப்படுவது செழிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)