குறைந்து வரும் பெரும் பணக்காரர்கள்; ஆச்சரியமளிக்கும் ஆய்வறிக்கை தகவல்கள்குறைந்து வரும் பெரும் பணக்காரர்கள்; ஆச்சரியமளிக்கும் ஆய்வறிக்கை ... ...  சீனாவின் பொருளாதார வளர்ச்சி 27 ஆண்டுகளில் இல்லாத சரிவு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 27 ஆண்டுகளில் இல்லாத சரிவு ...
கடன் வழங்க முடியாத நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
02:16

சென்னை: வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் விகிதங்களின் அளவு, நடப்பு நிதியாண்டின் அரையாண்டில் குறைந்துள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வணிக ரீதியில் வழங்கும் கடன் அளவில், வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள், 10 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன் அளவு, கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட, 8 சதவீதம் குறைந்துள்ளது.இந்த கடன்களின் எண்ணிக்கை, 1.68 லட்சம் ஆகும். இதுவே கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு முடிவில், 1.8 லட்சமாகவும், இரண்டாம் அரையாண்டு முடிவில், 1.7லட்சமாகவும் இருந்தன.மேலும், கடன் கேட்டு வரும், 100 விண்ணப்பங்களில், 72 விண்ணப்பங்களுக்கு மட்டுமே, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்கப்படுகின்றன.

இது, கடந்த நிதியாண்டில், 92 விண்ணப்பங்களாக இருந்தது எனவும், ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், நிதி நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள கடன் அளவு அதிகமாக இருப்பதாக, கிரெடிட் ஸ்கோர் ஏஜென்சி வெளிப்படுத்தி உள்ளது.இது குறித்து, நிதி நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது:வங்கிகள், எங்களுக்கு நிதி வழங்குவதில், பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கின்றன. இதனால், கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது.ஐந்து மற்றும் ஆறாம் நிலைநகரங்களில், கடன் கேட்டு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. அவர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)