'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை 'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை ...  கார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு கார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் ... ...
மிகை லாபம் ஈட்டும் வணிகர்கள் ஆறு புகார்கள் மட்டுமே பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
06:20

ஜி.எஸ்.டி., பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், வணிகர்கள் அதிக லாபத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழகத்தில் இதுவரை ஆறு புகார்கள் மட்டுமே பதிவாகி உள்ளன.ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி, வணிகர்கள் அதிக லாபம் அடைவதை தடுப்பதற்காக, ‘தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது.

பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டால், கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி.,யும் குறைக்கப்பட வேண்டும். ஆனால், வரி குறைக்கப்பட்ட பொருட்களை, பழைய விலைக்கே விற்பதால், அந்த பயன் பொதுமக்களுக்கு சேர்வதில்லை.எனவே, ஜி.எஸ்.டி.,யின் முழுமையான பயன்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக, இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் மிக சொற்ப புகார்களே, வணிகர்கள் மீது வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, மிகை லாப தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., பயனை வழங்காமல், அதிக லாபம் சம்பாதிப்பதில் ஈடுபடுவதாக, இதுவரை ஆறு வணிக நிறுவனங்கள் மீது மட்டுமே புகார்கள் வந்துள்ளன. இவை பொதுமக்கள் அளித்த புகார்கள்.இந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, உண்மை இருந்தால், மாநில நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவர்கள் அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பர். ஆனால், தமிழகத்தில் இதுவரை யார் மீதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)