பதிவு செய்த நாள்
21 அக்2019
06:20
நிரந்தர கணக்கு எண் எனப்படும், ‘பான் கார்டு’ பல்வேறு இடங்களில் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுவதால், பலரும் அதை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றனர்.
பான் கார்டை பர்சில் வைத்திருப்பது எளிதானது என்றாலும், எதிர்பாராத விதமாக அது தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் கவலை வேண்டாம். அதற்கு பதிலாக புதிய பான் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.பான் கார்டை, வருமான வரித்துறை, யூ.டி.ஐ.டி.எஸ்.எல்., அல்லது என்.எஸ்.டி.எல்-டி.என்., ஆகிய அமைப்புகள் வழங்குகின்றன.இந்த இரு அமைப்புகள் மூலமே, புதிய பான் கார்டை பெறலாம்; ரீபிரின்ட் வசதி இதற்கு உதவுகிறது.
இந்த இரண்டு அமைப்புகளில், உங்களுக்கு பான் கார்டு வழங்கிய அமைப்பின் இணைய தளத்திற்கு சென்று, அதில் உள்ள ரீபிரின்ட் கார்டு வாய்ப்பை தேர்வு செய்து விண்ணப்பித்தால், உங்கள் முகவரிக்கு புதிய கார்டு அனுப்பி வைக்கப்படும்; இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.வருமான வரித்துறையில் பதிவு செய்துள்ள முகவரிக்கு கார்டு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிக்கும் போது, பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதியை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அமைப்புகள் மூலம், இ- – பான் கார்டும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|