பதிவு செய்த நாள்
22 அக்2019
03:03
புதுடில்லி : இருசக்கர வாகன ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலத்தில், 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, சியாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி, 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், மொத்தம், 17.94 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில், இதே காலகட்டத்தில், 17.23 லட்சம் வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி ஆகியுள்ளன.ஸ்கூட்டர் பிரிவில், 2.01 லட்சம் வாகனங்களும்; மோட்டார் சைக்கிள் பிரிவில், 15.85 லட்சம் வாகனங்களும் ஏற்றுமதி ஆகியுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனம், 9 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை, 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, முன்னணியில் உள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் ஏற்றுமதி, 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.பஜாஜ் நிறுவனத்துக்கு அடுத்த இடங்களில், டி.வி.எஸ்., மோட்டார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.டி.வி.எஸ்., மோட்டார், 3.43 லட்சம் வாகனங்களையும், ஹோண்டா நிறுவனம், 1.74 லட்சம் வாகனங்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|