பதிவு செய்த நாள்
22 அக்2019
03:06
புதுடில்லி : மத்திய அரசு, நேற்று ஆறாம் கட்ட தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மக்கள் பங்குகள் உள்ளிட்டவற்றிலும் முதலீடு செய்வது வழக்கம். இதை முன்னிட்டு, மத்திய அரசும் திங்களன்று, ஆறாம் கட்ட தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டுள்ளது.மேலும், 1 கிராமுக்கு, 3,835 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆறாம் கட்ட தங்க சேமிப்பு பத்திரத்தில், 30ம் தேதி வரை முதலீடு செய்யலாம். தந்தேராஸ் நாளான, 25ம் தேதி விடுமுறையாகும்.
வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 3,785 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|