பதிவு செய்த நாள்
22 அக்2019
03:09
புதுடில்லி, : சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை, 18 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா வந்துவிட்டதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த நிதியாண்டு வரை, சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது. துாத்துக்குடியில் உள்ள, ‘வேதாந்தா’ நிறுவனத்துக்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. இதையடுத்து, 18 ஆண்டுகளுக்கு பின், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது.கடந்த நிதியாண்டில், சுத்திகரிக்கப்பட்ட தாமிர ஏற்றுமதி, 87.4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேசமயம் இறக்குமதி, 131.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தியா, சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை, ஜப்பான், காங்கோ, சிங்கப்பூர், சிலி, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. சீனா, தைவான், மலேஷியா, தென் கொரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.இந்தியாவில் தாமிர சுரங்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால், தாமிர தாது உள்ளிட்டவற்றில், 90 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|