தங்க சேமிப்பு பத்திரம் 1 கிராம் ரூ.3,835 தங்க சேமிப்பு பத்திரம் 1 கிராம் ரூ.3,835 ...  உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி ...
தாமிர இறக்குமதி அதிகரிப்பு 18 ஆண்டுகளில் இல்லாதது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:09

புதுடில்லி, : சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை, 18 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா வந்துவிட்டதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த நிதியாண்டு வரை, சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது. துாத்துக்குடியில் உள்ள, ‘வேதாந்தா’ நிறுவனத்துக்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. இதையடுத்து, 18 ஆண்டுகளுக்கு பின், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது.கடந்த நிதியாண்டில், சுத்திகரிக்கப்பட்ட தாமிர ஏற்றுமதி, 87.4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.


அதேசமயம் இறக்குமதி, 131.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தியா, சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை, ஜப்பான், காங்கோ, சிங்கப்பூர், சிலி, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. சீனா, தைவான், மலேஷியா, தென் கொரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.இந்தியாவில் தாமிர சுரங்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால், தாமிர தாது உள்ளிட்டவற்றில், 90 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)