பதிவு செய்த நாள்
23 அக்2019
07:03
சென்னை: பல்வேறு நிறுவனங்கள் சார்பில், தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலை, நேற்று முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின், 2018 – 19ம் நிதி ஆண்டிற்கான, தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகை, 14.71 லட்சம் ரூபாய்க்கான காசோலை; தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தில், தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகை, 9.30 கோடி ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில், முதல்வரிடம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தில், தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான, 8.35 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில், தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான, 2.56 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் துறை செயலர்கள் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|