பதிவு செய்த நாள்
23 அக்2019
07:05
புதுடில்லி: உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது.
நுண்கடன் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வரும், உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், 1,200 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக பங்கு வெளியீட்டு வருகிறது. இதற்கு அனுமதி கேட்டு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இவ்வங்கி செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, செபி தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட புதிய பங்குகளை வெளியிடும் என தெரிகிறது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் மூலதன அடிப்படையை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், 300 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இப்போது உஜ்ஜிவன் வங்கி, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|