பங்கு வெளியீட்டில் உஜ்ஜிவன் வங்கி பங்கு வெளியீட்டில் உஜ்ஜிவன் வங்கி ... சொத்து சேர்ப்பதில் இந்தியர்கள் சாதனை; இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பானது சொத்து சேர்ப்பதில் இந்தியர்கள் சாதனை; இந்திய குடும்பங்களின் சொத்து ... ...
பிரதமர் மோடிக்கு வால்மார்ட் கடிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
07:07

புதுடில்லி: வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டக் மெக்மில்லன், பிரதமர் மோடிக்கு, நிலையான வணிக சூழல் வேண்டி, கடிதம் எழுதியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான, வால்மார்ட், உலகெங்கிலும், 12 ஆயிரம் ஸ்டோர்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், 35.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை கொண்டதாகும்.மெக்மில்லன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் வணிக சூழலின் உறுதி குறித்தும், கணிக்கக்கூடிய தன்மை குறித்தும் அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்த வால்மார்ட்டின் நிலையினையும் கடிதத்தில் எடுத்து சொல்லியிருக்கிறார்.

எளிதில் வணிகம் செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து, பிரதமருக்கு கடிதத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.அண்மையில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் குறித்த விதிமுறைகளில் செய்திருக்கும் மாற்றங்கள், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியிருக்கும், வால்மார்ட் நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளது. கூடவே, மின்னணு வர்த்தக நிறுவனங்களின் வணிக மாதிரியை மறு ஆய்வு செய்யுமாறும் அது வர்த்தக அமைச்சரவைக்கு கோரிக்கை வைத்துவருகிறது. இச்சூழலில், வால்மார்ட் கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)